Wednesday, December 1, 2010

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.
நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே
தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கேபரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே
நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமதுசிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம்
கண்டிப்பாகவிமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட
வேண்டும்என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில்
அதிகப்படியாகமூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின்
இருப்பைநிராகரிக்கின்றது. இதன் பயன், இறைவனின் இருப்பை மறைமுகமாக
நிராகரிக்கிறது.ஏனெனில், இறைவன் ஒவ்வொருவரையும் அவரவருக்கான
தனித்துவம்-தனித்தன்மையுடனேபடைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல்செயல்படும் எந்த இரு மனிதர்களையும்
காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது.எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான
வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் இறைவன் அவரவரின்
வழியிலேயே செல்லதூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன்
மூலம்உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மனஅமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது
நம்மைநோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள்
மீதுதவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம்மனக்குறைப்பாட்டுக்கு
நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இதுதூக்கமின்மை, வயிற்று அல்சர்
மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாககாரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல்
அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறைநிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப
நினைவுபடுத்திக் கொள்வதால்மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான
பழக்கத்துக்குமுடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய
சிறியவிஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன்
செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பைவளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம்முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின்
சொந்தத்தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப்
பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர்.அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் -
அவர்களுக்குத் தேவையானதைக்கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை
வெகுசீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின்சாதனைகளை
அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்கஆரம்பிப்பார்கள்.
இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சிசெய்து, உங்களை நீங்களே ஏன்
சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடுவிளைவிப்பதை விட பெறுமதியானதல்ல!
நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள்வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான
அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.


4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை)கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும்
என்பதில் நாம்அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி
செய்பவரை விடநீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால்,
சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்;
உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியஉங்கள்
தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில்துவங்கி ஒரு ஆண்டே ஆன
உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம்.இது போன்று நம் தினசரி வாழ்வில்
பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காகநீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?
கூடாது!


நினைவில்கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு,
அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும்என்று
விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்கமுடியாது. நீங்கள்
பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறுஆவதற்கு எதுவுமே உதவவும்
செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப்பழிப்பதால் எந்தப் பயனும்
விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களைஎங்குமே கொண்டு சேர்க்காது; அது
உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள்சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள்
தான்தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத்தகுந்தாற்
போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத்
தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமானமாற்றத்தையும் இனிமையான
உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இதுதீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம்கட்டுப்பாட்டில்
இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும்விபத்துகளை நாம்
சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனாலோ அல்லது அவற்றை
மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வதுஎவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில
வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாகசகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது
நீங்கள் நம்பிக்கைவையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு
வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்தமுக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம்
அடிக்கடிநம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை
எடுத்துக்கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி
படுத்துகிறது.உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான
கவலைகளைஅளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?
உங்களின்புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை
அடையமாட்டீர்கள்.உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக்
கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம்செலவழியுங்கள்.
இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள்குறைந்த மனம், அதிக மன
அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும்எண்ணங்களிலிருந்து
விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர்நிலையாகும். தியானம்
செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள்.தினசரி குறைந்தது அரைமணி
நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்யமுடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து
மூன்றரை மணி நேரத்துக்குஅமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு
பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு
இலகுவாக தொந்தரவுஅடையாது.
சிறிது சிறிதாக தியானம் செய்வதன்அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை
அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக
எண்ணலாம். அதற்குமாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய
காலத்தில்நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமானமனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும்
வெற்றிடமானமனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை
எண்ணங்களாலும்பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக
உங்கள்பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில்
ஏதாவதுசெய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம்
அதிகபெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள
வேண்டும்.சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில்
பெரும்பாலும்நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால்,
நீங்கள்மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு
எடுக்கும்நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் இறைவனின் பெயரை
உளப்பூர்வமாககண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இதுஎன்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி
நேரத்தைவீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள்,
மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழுஅளவுக்குத்
திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதைஉங்களால் ஒருபோதும்
முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள்நேரத்தின் மதிப்பை உணர்ந்து,
முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல்உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவதுவிஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம்
பயின்று அடுத்த முறைநீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து
கவலைகொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர.உங்களின்
தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதைநினைத்து வருந்தி
ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோஅது நடப்பதற்குரிய விதியின்
வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்குஏன் அழ வேண்டும்?

புதிய படிப்பு

ஆந்திர பல்கலைக்கழகம் பி.இ.,(எலக்ட்ரோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்) என்ற புதிய

படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்படிப்புக்காக ஆந்திர பல்கலைக்கழகம்,

பெல்ஜியம் குரூப் டிபல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி

மாணவர்கள்

முதல் இரண்டு ஆண்டு ஆந்திர பல்கலைக்கழகத்திலும்,

அடுத்த இரண்டு ஆண்டுகள் பெல்ஜியம் குரூப் டிபல்கலைக்கழகத்திலும் படிக்கலாம்.

பெல்ஜியத்தில் படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு பகுதி நேர வேலையுடன்,

தொழிற்சாலை பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புக்கு: 0-98481 86121 , 0-94416 63874


அஸ்ஸலாமு அலைக்கும்,,,


சங்கர நேத்ராலயா அகாதெமியின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ செயலாளர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மருத்துவமனையில் டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக செயல்படுபவர்கள் மருத்துவ செயலாளர்கள். மருத்துவமனைகளின் அடிப்படை சூழல்கள்,மருத்துவ வழிகாட்டிகளுக்குத் தேவையான திறமைகள், உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் இயல்புகள் குறித்த தகவல்கள், மருத்துவ சொற்கள், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி,நிர்வாகம், சேவை முறைகள், தகவல் தொடர்பு திறன் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். 3 மாத கால சான்றிதழ் படிப்பான இதில் 25 வயதுக்குட்பட்ட, ஏதேனும் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய தகுதியுடன் மருத்துவமனைகளில் வரவேற்பாளராக, செயலாளர்களாக, டாக்டர்களின் உதவியாளராக பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். ஜனவரி 3-ம் தேதி பயிற்சி தொடங்க உள்ளது.


விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:


ஏ. மகாலிங்கம், அகாதெமி அலுவலர், சங்கர நேத்ராலயா அகாதெமி, 29, ஜெயலட்சுமி எஸ்டேட், ஹாடோஸ் சாலை, (சாஸ்திரி பவன் எதிரில்) நுங்கம்பாக்கம், சென்னை-6.

தொலைபேசி: 044-4308 4111, 4308 4222.

நல்ல படிப்பு என்று எனது நண்பர்கள் கூறினார்கள் , நன்றி சங்கர நேத்ராலய அகாடமி

தேனீ வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி அளிக்கப் படுகிறது. 6ம் தேதி சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் அதற்கு அடுத்த நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0422-661 1214. மின் அஞ்சல்: entomology@tnau.ac.in. மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

Wednesday, November 3, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

காய்ச்சல், உடல் வலி என்றால் உடனே நம்மில் பலரும் நேராக மருந்து கடைக்கு சென்று குரோசின், கால்போல் போன்ற மாத்திரைகளின் பெயரை சொல்லி அவற்றை கேட்டு வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி போன்றவற்றிற்கு பாரசிடமால் வகையை சேர்ந்த இந்த மாத்திரைகள் ஏற்றதுதான் என்ற போதிலும் அளவுக்கு அதிகமாக இவற்றைப் பயன்படுத்தினால் ஈரல் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசிடாமெனோபின் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரசிடமால் மாத்திரைகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்காவின் எஃப்டிஐ குழு, இந்த மாத்திரைகளின் லேபிள் மீது எச்சரிக்கை வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. பாரசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்துமாறு நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ள இந்த அமைப்பு, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 4 மில்லி கிராம் என்ற அளவை விட குறைவாக அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவர்கள் கூறுகையில், பாரசிடமால் மாத்திரைகள் நமது நாட்டைப் பொறுத்தவரையில் டாக்டர்கள் பிரிளூ;கிருப்ஷனுடன் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற உபாதைகளுக்கு ஏற்றது தான் என்று கூறியுள்ளனர். ஆனால் மேலை நாடுகளில் இந்த மருந்து தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் எஃப்டிஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஈரல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்திருப்பதன் விளைவாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரோசின், கால்போல், மெடாசின், பாசிமோல், பைரிஜெசிக் என்று பல பெயர்களில் பாரசிடமால் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மருத்துவர்கள் பரிந்துரையுடன் உட்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இவை எளிதாக கிடைக்கிறது என்பதால் மக்கள் தாங்களாகவே வாங்கிச் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



السلام عليكم ورحمة الله وبركاته



words to say

Jazak Allah Khair

السلام عليكم ورحمة الله وبركاته
---------------------------------------------------------------------

Junk Food கடைகளின் அந்தரங்கங்கள் அம்பலம்

நாm எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.

1 .வரலாறு


  • 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.
  • 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது.
  • 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.
  • 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது

2 .சந்தை நிலவரம்

  • McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion
  • YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut ) $11.3 Billion
  • Wendy 's & Arby 's இன் வருமானம் 6 700 locations களில்இருந்து $3.6 Billion
  • Burger King இன் வருமானம் 11 200 locations களில்இருந்து $2.5 Billion

3.McDonald 's இன் சந்தை நிலவரம்

  • 126 நாடுகளில் இயங்குகிறது
  • 400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்
  • அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன
  • US இல் மாடு,பன்றி இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்

4 .Super Heavy users

  • இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்
  • 75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது
  • 60 % sales Drive Through மூலம் நடக்கிறது


5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்

  • 61 % - கொங் Kong
  • 59% - மலேசியா
  • 54% - பிலிப்பைன்ஸ்
  • 50% - சிங்கபூர்
  • 44% - தாய்லாந்து
  • 41% - சீனா
  • 37% - இந்தியா
  • 35% - அமெரிக்கா
  • 14% - இங்கிலாந்த்து
  • 03% - சுவீடன்


6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு

45 - Jack In The Box
62 - Taco Bell
84 - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை
98 - Subway
98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ கையாளல்
102 - KFC - காலாவதியான இறைச்சி
111 - Burger King
115 - Arby 's
118 - Hardee 's
126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை


7 .பயங்கரம்

  • ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்
  • McDonald 's அநோமதய விலங்கு பொருட்களில் இருந்து சுவை ஊட்டப்படுகிறது
  • Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை கொண்டது.
  • Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது
  • ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது

8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்


  • Sodium Phosphate - Fast Food Coffee
  • Titanium Diaoxcide - fat free ranch dressing
  • Dimethylpolysiloxane - McNuggets
  • Azodicarbonamide - Sub way bread
  • Diacetyl - Milk Shake
Thanks to source link : http://nishole.blogspot.com/2010/10/fast-food.html
குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர்களை அரபு நாடுகளின் சட்டத்தில் தண்டிக்க வேண்டும் :
பெண் வக்கீல்கள் நலச்சங்கம் வேண்டுகோள்



கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்க செயலாளர் வெண்ணிலா விடுத்துள்ள அறிக்கை:கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளது.

ஏதுமறியாத இளந்தளிர்களை கிள்ளி எறிந்த மனித மிருகங்களின் செயலால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொடியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

"ராகிங்' குற்றத்துக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது போல், குழந்தைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனையால், கொடூரர்கள் மனதில் தண்டனை பற்றிய பயம் ஏற்படும். குற்றங்கள் குறையும்.

குறிப்பாக, குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் போல் இருக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.


பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கால்டாக்ஸி, வேன்களின் கண்ணாடி ஒட்டப்பட்டுள்ள கருப்பு நிறத்தை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளியில் இருந்தே குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.


குழந்தைகளை பெற்றோரே அழைத்துச் செல்லும் வகையில் அவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். இதற்கேற்ப பள்ளி அலுவல் நேரத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்களின் வழித்தடத்தை காவல்துறை அலுவலகங்களுடன் தொழில் நுட்ப ரீதியில் இணைக்கப்பட வேண்டும்.


வழக்கமாக குழந்தைகளை அழைத்துச்செல்லும் ஆட்டோ, வேன் மற்றும் கால்டாக்ஸிகளில் கேமரா பொறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்
1. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?
இப்பொழுதான் அந்த வீழ்ச்சியின் பாதிப்பிலிருந்து பிரிட்டன் மெல்ல மீண்டு வருகிற நிலையில், பொருளாதார வீழ்ச்சி தாக்கம் மற்றும் இதர காரணங்களால் பிரிட்டனில் இன்னமும் வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 25 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்!
இந்நிலையில் அயல்நாடுகளிலிருந்து வேலை தேடி வருவோர்களுக்கு எதிராக எப்பொழுதுமே கடுமையாக பேசி வரும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் டேமியன் கிரீன், குறைந்த கல்வி தகுதியுடைய வேலைகளை தேடி அயல்நாட்டவர்கள் இங்கிலாந்துக்கு வரவேண்டாம் என்றும், அத்தகைய வேலைகளை செய்ய பிரிட்டனிலேயே பல்லாயிரக்கணக்கானோர் உள்ளதாகவும், மிக உயர் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இங்கு ஓரளவு வேலை வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.மேலும் தங்கள் நாடு குறைந்த கல்வி தகுதியுடையவர்களுக்கு, - கிட்டத்தட்ட கூலியாட்கள் - வேலை அளிக்கும் சந்தை கிடையாது என்றும் அவர் காட்டம் காட்டியுள்ளார். இந்த ரக தொழிலாளர்கள் வருவதை தடுப்பதற்குதான், கடந்த 2008 ஆம் ஆண்டில், முந்தைய தொழிலாளர் கட்சி அரசு வேலை தேடி வருபவர்களுக்கு அவர்களது திறமையின் அடிப்படையில், புள்ளிகள் அடிப்படையிலான Tier-1 கிரேடு முறையை கொண்டுவந்தது. சிறந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே இங்கிலாந்துக்கு வரவழைப்பதற்கான ஒரு யுக்தியாகவும் இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த மற்றும் படித்து முடித்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுகொண்டிருந்த இந்திய மாணவர்களும் மேற்கூறிய Tier-1 கிரேடு முறைக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் தங்களுக்கான பணி அனுபவத்தை பெற மேலும் இரண்டாண்டுகள் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தங்களது பணி திறமைகளை அதிகரித்துக்கொள்வதோடு, அயல்நாட்டவர்கள் இங்கிலாந்தில்
பணியாற்ற அதிகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழித்திறனுக்கு ஏற்ப, தங்களது தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆங்கில மொழித்திறன் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் குறைந்துபோன வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால்தான், இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வெளியே வந்த இந்திய எம்.பி.ஏ. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், வேலை
இன்றி தவிப்பதோடு, பிழைப்பை ஓட்ட வேண்டுமே என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஓட்டல்களிலும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
இன்று லண்டனிலுள்ள ஓட்டல்களில் ஒரு சுற்று சுற்றி வந்தால், பாதிக்கும் அதிகமான் ஓட்டல்களில் இந்தியாவை சேர்ந்த எம்.பி.ஏ. முடித்த பலர் "வெயிட்டர்"களாக பணியாற்றுவதை பார்க்கலாம் என்கிறார் சுல்தானா என்ற இந்திய மாணவி.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.பி.ஏ. முடித்தவர்.வேலை கிடைக்காமல் ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றுகிறார். துரதிர்ஷ்டவசமாக நான் எதிர்பார்த்ததுபோன்று எனக்கு வேலை கிடைக்கவில்லை.அதனால்தான் நான் ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றுகிறேன்.நான் மட்டுமல்ல; என்னுடன் படித்த எனது நண்பர்கள் ஏராளனமானோரும் என்னைப்போன்றே அவர்களது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் ஓட்டல்களில் வெயிட்டர்களாக பணியாற்றுகிறார்கள்.சிலர் இரவு நேர செக்யூரிட்டி பணியாளர்களாகவும் வேலை பார்க்கிறார்கள்" என்று துயரத்துடன் கூறுகிறார். ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா இனவெறியை காண்பித்து இந்திய மாணவர்களை துரத்திக்கொண்டிருக்கையில், தற்போது பிரிட்டனும் பயமுறுத்துகிறது. எனவே டாலர்களில் சம்பளம் வாங்கும் கனவில் அயல்நாடுகளுக்கு படிக்கவும் , படித்து முடித்து பணிக்கும் செல்ல நினைப்பவர்கள், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?" என்று தங்களுக்குள் கேட்டு யோசித்துவிட்டு, அதன் பின்னர் முடிவெடுப்பது நல்லது.
----------------------------------------------
2. புதிய வடிவில் மோசடி இ மெயில்கள்!

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள். இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.
இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.
ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள். கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள். பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.
ர்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.
அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும். அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).
ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HRபிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம். அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள
--

Train Ready For pilgrims

http://www9.0zz0.com/2010/10/26/00/699734448.jpg
அஸ்ஸலாமு அலைக்கும்,,,

கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு... ""சார்... என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி
டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி
அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுறஅறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங் கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங்கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி...
அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்'' -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.

அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின்
அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற
சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.
சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க... வெளியில் வந்து காத்திருந்தோம்.


மணி... மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி
பெண்கள்... திருமணமாகாத இளம்பெண்கள்... அந்த அறைக்கு சென்று பரிசோதனை சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய...பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழலவிட்டோம்.அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க...
அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா
பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் ""சரிங்க... நீங்க
வெளியில் போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்'' என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே... எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ...என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது
ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே
நுழைந்தால் பரபரப்பாகிவிடும்... என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக்
கொண்டிருக்கும் போதே... ஒரு சின்ன "கேப்' கிடைத்தது.
நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக... பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்... பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து... கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே "க்ளிக் க்ளிக்'என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக்கலைஞர். அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து வெளியேற... நல்லவேளை
ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த
தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்... க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்... மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் சிகிச்சைக்கு கர்ப்பிணிமனையை அழைத்து வந்த கணவனைப் போல்.
""எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க'' என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல... நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்...நைஸாக.""ஹலோ வணக்கம்... டாக்டர் செல்லராணி மேடம்ங்களா? ''""ம்...?'' ""ஆஹ்... நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன்மேடம்...''""சரி...''""அது... வந்து... இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து
அழுறாமேடம்.'' ""அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?''
""கேமரா இருக்குங்களே மேடம்?''""ப்ச்... கேமரா வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.) ""அதில்ல மேடம்... நானும் வந்து பார்த்தேன் மேடம்... கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா... நீங்க டாக்டர்,பார்க்கலாம். ஆனா... வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.
""இங்க பாருங்க... கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.
""ஓ... அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையாமேடம்?''. ""இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற
அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்' என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே?அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ ""எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால... நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்...அந்தப்பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல
இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர்டாக்டருமில்ல...ஆனா... இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணிபெண்கள்மட்டுமில்ல...திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து
அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க'' என்று வேதனையுடன் சொன்னவர் ""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்தடாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற
ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண்இறந்துட்டாங்க.... இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனைர சிக்கவைக்கிறாங்களேச்சே'' என்கிறார்நொந்தபடி.""கூச்சம்,பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்...
வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க... அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல
மருத்துவர்கள். கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமைஇழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.அல்லாஹ்தான் நம்மையும் நம் குடும்பத்தார்களையும் பாதுகாக்க போதுமானவன். இதற்கு
இன்னுமொரு காரணம் நம் சமூதாயத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாக இருப்பதுதான், இதை கவனத்தில் கொண்டு நாம் நமது சமுதாயத்தில் அதிக மருத்துவர்களை உருவாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ். எந்த மருத்துவரிடம் சென்றாலும் அந்த
மருத்துவரைப்பற்றி நன்றாக தெரிந்த பின்னரே குடும்ப பெண்களை அழைத்து
செல்லுங்கள். இந்த விஷயத்தில் பெண்களை தனியாக அனுப்ப வேண்டாம். கூடுமானவரை பெண்களை பெண் மருத்துவரிடமே அழைத்து செல்லுங்கள். பெண்மருத்துவரிடம் சென்றாலும் இஸ்லாத்தின் நெறிமுறைகளை ஒழுங்காக பேனி நடப்பது ஆண் பெண் இருவருக்குமே பாதுகாப்பானதாகும்.
--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71
அஸ்ஸலாமு அலைக்கும்.
Blood Cancer ஐ குணப்படுத்தும் மாத்திரை இலவசமாக.

Dear All,

Please forward the message that who needs.

'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.

Forward to as many as u can, kindness cost nothing.

Cancer Institute in Adyar, Chennai

Category:
Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754, 044-24911526, 044-22350241

Thanks to
Br. Abdul Mohamed

Thursday, September 30, 2010

Fw: இப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்படக்கூடாது !.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகளும் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றால் மிகையில்லை. இந்த விளையாட்டுக்காக மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட பல சாதனைகளை எல்லாம் மறக்கும் அளவுக்கு, இந்த ஏற்பாடுகளில் உள்ள குறைகளும் சில அசம்பாவிதச் சம்பவங்களும் பெரிதாகப் பேசப்படுகின்றன. தலைநிமிர்ந்து பூரிக்க வேண்டிய நாம் தலைக்குனிவுடன் பேச வேண்டிய சோகத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.


Delhi Metro Picture






Delhi Metro Photo of Delhi Central Park Metro



Delhi Metro Rail: delhi 20 metro 20rail



புதுதில்லியில் மெட்ரோ ரயில் என்கிற நவீன ரயில் போக்குவரத்தையும் சர்வதேச தரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிர்மாணித்திருக்கிறோம்.


---------------------------------------------------------------------------------------------------------------


IGI Airport- Vision 2010


Runway Domestic Terminal


Domestic Terminal Check-In Area


புதுதில்லியில் மிகப்பெரிய விமான நிலையத்தையும் சர்வதேச தரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிர்மாணித்திருக்கிறோம்.


------------------------------------------------------------------------------------------------------------------


கட்டிலில் நாய் படுத்திருப்பதையும் கக்கூஸ் கழுவப்படாததையும் விளையாட்டரங்கின் ஒட்டுக்கூரையிலிருந்து 2 அட்டைகள் பெயர்ந்து விழுந்ததையும் பெரிதாகப் பேசி நம்முடைய மானத்தை வாங்குகின்றனர் நாக்கிலே நரம்பில்லாதவர்கள்.
இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் பொதுப்பணித்துறைதான் காரணம், இல்லையில்லை தில்லி மாநில அரசுதான் காரணம்,விளையாட்டுத் துறைதான் காரணம், விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுதான் காரணம் என்றெல்லாம் மாற்றிமாற்றி பழி சுமத்தப்படுகிறது.
உண்மை என்னவென்றால், தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை 2010-ல் நடத்துவது என்று 2003-லேயே தீர்மானித்துவிட்டு 2008 வரையில் எதுவுமே செய்யப்படவில்லை. இந்த வேலைகள் எல்லாம் மத்திய அமைச்சர்கள் குழுவிடம் விடப்பட்டது.
இதை யார் செய்வது, எப்படிச் செய்வது என்று அமைச்சர்கள் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டிருந்த நேரத்தில் அவை தொடர்பான கோப்புகள் தூங்கிக்கொண்டிருந்தன. திடீரென விழித்துக் கொண்ட அரசு, போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்டுக்கொண்ட பிறகு, கறைபடிந்த நிர்வாக அமைப்பின் மூலம் காரியங்களைச் செய்யத் தொடங்கினர். முடிவெடுக்கத் திணறும் அமைச்சர்களின் மெத்தனங்களால் அடுத்தடுத்து தவறுகளாகவே நடக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் எல்லாம் நன்றாகவே இருக்கிறது, எதிலும் குறை இல்லை என்ற பதிலையே அரசிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும்.
சாப்பாட்டுக்கே வழியில்லாத கோடிக்கணக்கான ஏழைகள் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கும் வேளையில் அரசுக்கு நெருக்கமான இடத்தில் இருக்கும் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தண்ணீராகச் செலவழித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த நிலையில் மெஹ்ரூலியில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட விடுதிகளில் உள்ள கட்டில்களில் தெரு நாய்கள் நிம்மதியாகப் படுத்து ஓய்வெடுப்பதில் வியப்பு என்ன இருக்க முடியும்? மெஹ்ரூலிப் பகுதியில் தெரு நாய்கள் மட்டும் அல்ல மட்டக் குதிரைகள் என்று அழைக்கப்படும் கழுதைகள்,மாடுகள், ஏராளமான குரங்குகள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். வயதாகிவிட்ட ஒரு ஒட்டகம்கூட கவனிப்பாரில்லாமல் அங்குமிங்கும் இரைதேடி அலைந்துகொண்டே இருக்கும்.
தில்லிக்கு அருகிலேயே இருந்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்கள் படும் இன்னல்கள் அனைத்தும் இந்த கிராமத்துக்கும் உண்டு. இவையெல்லாம் நாம் அறியாததா? பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் செய்தி வரும்போது மட்டும் ஏதோ புதிதாக இதையெல்லாம் கேள்விப்படுவதைப்போல நாம் ஏன் நடிக்க வேண்டும்?
எது எப்படியோ, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமல், ஊழலுக்கும் தரம் குறைந்த வேலைகளுக்கும் மிகவும் இடம் அளித்துவிட்டோம். இதனால் அரசுக்கு கெட்ட பெயரும் பெருத்த அவமானமும் சர்வதேச அளவில் ஏற்பட்டுவிட்டது. எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று மட்டும் ஆள்வோர்கள் நினைக்கக்கூடாது.
99%
வேலைகளை முடித்துவிட்ட நிலையில் சில குடியிருப்புகளில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை, கதவுகளைப் பொருத்தவில்லை, பாத்ரூம்கள் கழுவப்படவில்லை என்பதற்காக நமக்கு அவமானம் ஏற்பட்டுவிடக்கூடாது. எஞ்சிய பணிகளை போர்க்கால அடிப்படையில் தரமாக செய்து முடிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும் விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில்லும் இரவு பகல் பாராமல் விளையாட்டு கிராமத்திலேயே முகாமிட்டு எல்லாப் பணிகளையும் நேரடியாக மேற்பார்வை செய்து முடித்தாலும் தவறில்லை.
நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இல்லாத இயற்கையும் சேர்ந்து சதி செய்து தில்லி மாநகரமே வரலாறு காணாத மழையாலும் வெள்ளத்தாலும் தத்தளிக்கிறது. திட்டமிட்டபடி வேலைகள் நடக்காததற்கு இதுவும் முக்கிய காரணம். வட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்போது காணப்படும் மழையாலும் வெள்ளத்தாலும் ஏராளமான கிராமங்களும் பெரு நகரங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இந்த நாட்டுக்குள்ள நல்ல பெயரை ஒரு சிலர் சேர்ந்து கெடுப்பதற்கு நாம் அனுமதித்துவிடக்கூடாது. இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் யார் காரணம் என்று அரசியல்ரீதியாக விவாதிக்க இது தருணம் அல்ல; ஆனால் இதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க நாட்டின் அரசியல் தலைமையையே சாரும்.
கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8% அல்லது அதற்கும் மேலாகவே இருந்து வருகிறது என்ற சாதனைகளையெல்லாம் இந்த விளையாட்டுப் போட்டிக் குளறுபடிகள் மறக்கச் செய்துவிட்டதே என்று நினைக்கும்போது கோபம் அதிகரிக்கவே செய்கிறது. இந்த வளர்ச்சியை அடைய நம் முன்னோர்கள் எத்தகைய அடித்தளங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்? சர்வதேச அளவில் தொழில் முதலீட்டுக்கு உற்ற நாடாக இருக்கிறோம் என்பதால்தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மைத் தேடி வருகின்றன; நம் நாட்டவர்கள் திறமையானவர்கள் என்பது எல்லா துறைகளிலும் சர்வதேச அளவில் இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளைப் பார்ப்போம். 2008 வரை காத்திராமல் 2006-லேயே தொடங்கியிருந்தால் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எல்லாம் தயாராக இருந்திருக்கும். எனவே இந்த அவமானத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை, அது அதிகாரபீடத்தின் உச்சியில் இருப்பவர்களிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். இந்தப் பாடத்தை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. இனி இப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்படக்கூடாது